வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தகவல்!
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தகவல்!
கட்டுநாயக விமான நிலையத்தில் நீங்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது நீங்கள் வெளியேறும் வாயிலில் ஏராளமான வாகன கூலி வண்டிகளை காணலாம். வெளிநாடுகளில் உள்ளது போன்று இங்கு இதற்கான ஓர் ஒழுங்கமைப்பு இன்னும் இல்லை. இது ஒரு மாபியாவாக மாறியிருக்கிறது. எந்த வாகனம் யாரை ஏற்றுவது, rate எவ்வளவு என்ற எந்த நியமங்களும் இங்கு இல்லை.
இதற்கு மாற்றீடாக தற்போது விமான நிலையத்தில் UBER மற்றும் PICKME சேவைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. இம்மாபியாவுடன் ஒப்பீட்டளவில் இவர்களின் சேவை சிறந்தது.
அவ் செயலியில் காட்டும் தொகையையே நீங்கள் செலுத்த வேண்டும்.
விமான நிலையத்தினுள் இருந்து வெளியேறுகையில் இரு வாயில்கள் உண்டு. இதில் இடது பக்க வாயில் மூலம் நீங்கள் வெளியேறும்போது, படத்தில் காட்டப்பட்டுள்ள UBER, PICKME க்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் காணப்படுகிறது. எந்த நேரமும் அவ்விடத்தில் ஒரு வாகனம் நிறுத்தப்பட்டே இருக்கும். அங்கு சென்று உங்களுக்கான வாகன வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.