அதிகமாக பாடசாலை மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உருவாகும் சருமதொற்று நோய்!!!
அதிகமாக பாடசாலை மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உருவாகும் சருமதொற்று நோய்!!!
பொதுமக்கள் நெரிசலான இடம் பாடசாலை மாணவர்கள் பரிட்சை ,கருத்தரங்கு போது திடிரென்று தமது மறைவாக பாகங்களை சொரிந்து கொண்டு இருப்பார்கள் ,அவர்களே அறியாமல் தன்னை மறந்து சருமத்தின் கடியால் கைவிரலினால் தேய்க்கும் போது எதிரேயுள்ள நபர்கள்கள் தப்பித்தவறி பார்வைக்கு தென்படின் வெட்கத்தினால் கூனிக்குறுகும் அளவு எம்மை கொண்டு சென்ற சருமநோய் /கடி வகைதான்
வட்டக்கடி(படர்தாமரை )என அழைப்பார்கள் .
ஆரம்பத்திலே மறைவான பாகங்களில் உருவாகும் என கூறும்போதே விளங்கி கொண்டிருப்பீர்கள் சூரிய வெளிச்சம் படாத இலகுவில் தொற்றுக்கொள்ளாக்கப்படும் உடல் பாகங்களில் இது பெரும்பாலும் ஏற்படும்,
ஈரலிப்பில் உருவாகும்
பங்கசுக்களின் தொற்றுக்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான தோல் பிரச்சனை தான் படர்தாமரை. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இதை ஆரம்றுபத்திலேயே சரிசெய்துவிட்டால் பிரச்சனை இல்லை. இந்த படர்தாமரை ஒருவருக்கு உடலின் தலை , கால் , அக்குள் , இடுப்பு ( அரை ) மட்டுமல்லாது எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம்.
இதன் அறிகுறிகள் வட்ட அல்லது வளைய வடிவாகவும் , மிகுந்த அரிப்புடையதாகவும் , சிவந்தும் இருக்கும் . ஆனால் பார்வைக்கு சுகம்பெற்றது போல வட்ட வடிவில் நடுப்பக்கம் காய்ந்தது ஓரங்களில் நீர் போன்று கசியும் இதை சொறிவதே இதனால் பாதிக்கப்பட்டவருக்கும் ஆரம்பத்தில் இன்பமாயிருக்கும் பிறகு காயங்கள் ஆழமாக சின்ன உறுத்தல் தொடுகையுறும் போதே வேதனையிருக்கும்.
சிறுநீர் கழித்து சுத்தப்படாமல் நடமாடும் போது அவை துளிதுளியாக தொடைகளால் வழியும் போது ,ஒருவர் பாவித்த ஆடைகளை அணிவதால் அவரது வியர்வை மற்றும் உள்ளாடைகளை கழுவி அணியாமல் தொடர்ந்து அவற்றை பாவிப்பது ,அத்தோடு சூரிய ஒளியில் ஆடைகளை உலர்த்தாமல் அணியும் போது பெரும்பாலும் இவை உருவாகுன்றது.
இதை இலகுவாக் குணப்படுத்த பின் வரும் சுகாதார ஆலோசனைகளைப் பேணவும் .
1 . தினமும் இரு முறை தொற்றுநீக்கி சவர்க்காரம்
கொண்டு குளிக்கவும்
2 . ஒரு முறை கழற்றிய ஆடைகளை மீண்டும்
கழுவாமல் அணிய வேண்டாம்
3 . மிகவும் சுத்தம் பேண வேண்டும்
4 . மற்றும் மேலைத்தேய toilet use
பண்ணுபவர்கள் , தொடைகளில் இருக்கும்
சிரங்குகளில் அவதானமாக இருக்க வேண்டும்
ஏனெனில் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ
அதிக வாய்ப்புண்டு .
இதை தவிர்க்க toilet பாவித்த பின்
இருக்கைகளை நன்கு நீரால் கழுவி
விடவேண்டும்
5 . மற்றும் உங்கள் ஆடைகளை , துடைக்கும்
துணியை , படுக்கையை பகிர வேண்டாம் .
இதற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் பங்கசு கிருமி எதிர்ப்பு மேலைத்தேய மருந்துகள் பின்வருவனசருமத்தில் பூசும் கிறிம்,வகைகள்
1 . Miconazole cream
2 . Clotrimazole cream
3 . Terbinafine cream
குளுசை வகைகள்
1 . Griseofulvin 500 mg இரவு சாப்பாட்டின் பின்
குறைந்தது 2 வாரங்களுக்கு
2 . Fluconazole 150 mg வாரத்துக்கு ஒரு
முறைப்படி 4 வாரங்களுக்கு
இவற்றில் ஏதாவது ஒரு creamஐயும் இரு குளுசைகளையும் பாவித்து வந்தால் முற்றாக குணப்படுத்த முடியும் .
இதே cream வகைகளை தேமலுக்கும் பாவிக்க முடியும் . அதே சுகாதார ஆலாசனைகளையும் பேண வேண்டும் .