இரு மூதாட்டிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு மூதாட்டிகளை அடையாளங்காண கண்டி பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இரு மூதாட்டிகளும் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த புகைப்படங்களில் உள்ள மூதாட்டிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கண்டி பொலிஸ் நிலையம் 081 222 2222 அல்லது கண்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு 071 816 3740 ஆகியவற்றின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.