கட்சி தாவலுடன் உருவாக உள்ள ஒரு தேசிய அரசாங்கம்.!
![கட்சி தாவலுடன் உருவாக உள்ள ஒரு தேசிய அரசாங்கம்.!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/07/FB_IMG_1720063427900.jpg)
கட்சி தாவலுடன் உருவாக உள்ள ஒரு தேசிய அரசாங்கம்.!
அரசாங்கத்தின் அமைச்சர்களும் , எம்.பி.க்களும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் , இப்போது பல பகுதிகளாகப் பிரிந்துள்ளனர்.
அடுத்த பொதுத்தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதே அவர்களின் பெரும்பான்மையினரின் முயற்சி. அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய பெரும்பாலான அரசியல்வாதிகள் தயாராக உள்ளனர். இப்போது, பல கட்சி தாவல்களுக்கு, பலர் தயாராக உள்ளனர்.
அரசியலில் நிரந்தர எதிரிகளோ நண்பர்களோ இல்லை.
சந்திரிகாவின் நற்பண்புகளை பேசியவர்கள், மகிந்த ராஜபக்சவிடமும், பின்னர் மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றனர். மத்திய வங்கி தொடர்பில் ரணில் மீது குற்றம் சுமத்தியவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவை புகழ்ந்து பாடி நாடு முழுவதும் சுற்றி வருகின்றனர்.
ராஜபக்சக்களை வணங்கி, ராஜபக்சக்களால் அரசியலுக்கு வந்து, அவர்களின் உதவியுடன் பாராளுமன்றம் வரை சென்ற சிலர், இன்று ராஜபக்சவினரை வசைபாடி சபித்து வருகின்றனர்.
ரணிலை விட்டு சஜித்திடம் சென்ற சிலர் இன்று மீண்டும் ரணிலிடம் வந்துள்ளனர்.
கட்சி அரசியலிலும் ஜனநாயகத்திலும் இவை விசித்திரமானவை அல்ல. மறுபுறம், அவர்களின் வேலை அரசியல் என்பதால் எந்தக் கட்சியிலிருந்தும் , பாராளுமன்றத்திற்கு வருவதற்கான உரிமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியல் செய்ய வேண்டுமானால் , நாடாளுமன்றத்துக்கு வர வேண்டியது அவசியம்.