கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடி குண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பெடுத்து புரளியை கிளப்பிய பதட்டத்தை ஏற்படுத்திய நபர் கைது!
![கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடி குண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பெடுத்து புரளியை கிளப்பிய பதட்டத்தை ஏற்படுத்திய நபர் கைது!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/07/FB_IMG_1719971768862.jpg)
கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடி குண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பெடுத்து புரளியை கிளப்பிய பதட்டத்தை ஏற்படுத்திய நபர் கைது!
கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் எதற்காக வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார் என்பது தொடர்பில் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர் .
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை (02) காலை 10 மணியளவில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டனர். ஸ்தலத்துக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்படவில்லை.