திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி கண்டுபிடிப்பு..!
திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி கண்டுபிடிப்பு..!
இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து 10 மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நிலாவளி சுற்றுலா போலீஸ்,இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை,சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுப்ரமணியம் பேரின்பராசா (வண்ணம் )என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் மீட்டு எடுத்துள்ளனர்.
குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்படுள்ளது குறிப்பிடதக்கது.