இன்று 26.06.2024 சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு.!
இன்று 26.06.2024 சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு.!
கல்விக்கரம் உதவி மையம் போதையை ஒழிப்போம் – நம் பாதையை நாமே வகுப்போம்
அன்பான நம் தமிழ் மக்களே!
போருக்குப் பின்னரான காலத்தில் நமது பிரதேசத்தில் போதைப் பொருட்களின் அதீத வருகையும் போதைவஸ்துப் பாவனையாளர்களின் அதிகரிப்பும் நம்மை வேதனைப்படுத்துகின்றது. கல்வி, கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் உச்ச வளர்ச்சி நிலையை அடைந்திருந்த தமிழ் மக்களாகிய நமது வளர்ச்சியின் இன்றைய நிலை என்ன? கல்வியில் 9 மாகாணங்களில் முதல் நிலையிலிருந்த நம் வடக்கு மாகாணம் இன்று 9ம் மாகாணமாக கீழிறங்கி விட்டது. கலாச்சாரம் முழுதாக மாறி வாள்வெட்டுக் கலாச்சாரம், அரைகுறை ஆடைக்கலாச்சாரம் என்று மாறி விட்டது. முதியோர்களை பராமரிக்கத் தவறி முதியோர் இல்லங்களை நாடுவதும், அவர்களை பராமரிக்க தவறுவதும், சிறுவர்கள் கல்வியை இழந்து சிதறிச் சின்னா பின்னமாக வரும் நிலையிலும் நமது பண்பாடே கேள்விக் குறியான நிலையிலுள்ளது. இந்த நிலை வருவதற்கான காரணம் என்ன?
மக்களே! தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான கல்வி, கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நிலை குலைய வைப்பதில் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதைப் பொருளின் வருகை என்பதனை நீங்கள் அறியவில்லையா?
இளைஞர்களே! யுவதிகளே! நமது வாழ்க்கையை சீர்குலைத்து நம்மை நோயாளியாக்கி குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நம்மை மரணத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு இந்தப் போதைப் பொருட்களை இன்றே
தகர்த்தெறிவோம்! நம் தமிழ் இனத்தின் அடையாளங்களுடான வாழ்க்கையை
கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்!
இன்றைய இளைஞர்களே எதிர்காலத்தின் தலைவர்கள் NO DRUGS
“சிந்தியுங்கள் செயற்படுங்கள்”
போதையின் வருகையைத் தடுத்து நம் இளம் சந்ததியினரின்
வாழ்க்கையை அழகுபடுத்த ஒன்றிணைவோம்.
“நமக்கான வாழ்வை நாமே வடிவமைப்போம்.
கே.கே.எஸ் வீதி,
இணுவில்.
தொ.இல: 077 320 6555
நன்றி
கல்விக்கரம் உதவி மையம்