தங்கம் கடத்திய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது.!
தங்கம் கடத்திய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது.!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2 கிலோவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.