பிள்ளைகளின் டியூஷன் வகுப்புகளுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றோர்கள் செலவிடுகின்றனர்: கல்வியமைச்சர்!
பிள்ளைகளின் டியூஷன் வகுப்புகளுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றோர்கள் செலவிடுகின்றனர்: கல்வியமைச்சர்!
பெற்றோர் கள் தங்கள் பிள்ளைகளின் பிரத்தியேக (டியூஷன்) வகுப்புகளுக்கு கட்டணமாக 800 பில்லியன் (80 ஆயிரம் கோடி) ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடுகிறார்கள்” என்று, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்னும் ஐந்து வருடங்களில் வகுப்பறைகளில் பிள்ளைகள் இருக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் டியூஷன் வகுப்புகளுக்கே வருவார்கள் எனவும் அவர் கூறினார்.
பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.