ஜனாதிபதியின் பதவி காலம் நீடிக்கப்படுமா? நீதி அமைச்சர் விளக்கம்.!
ஜனாதிபதியின் பதவி காலம் நீடிக்கப்படுமா? நீதி அமைச்சர் விளக்கம்.!
ஜனாதிபதியின் பதவி காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து ஆறாக அதிகரிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என வெளியாகும் தகவல்களை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேர்தலை பிற்போடுவது தொடர்பில் அரசுக்குள் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு செய்யவும் முடியாது. உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்படும்.
புதிய அரசமைப்பு பற்றி கதைப்பதற்கு தற்போது நேரம் இல்லை. 4 தேர்தல்கள் நடத்தப்படவேண்டியுள்ள நிலையில், அதற்கு நேரம் இல்லை. மக்களின் அனுமதியை பெறக்கூடிய சூழ்நிலையும் இல்லை.
அச்சம் காரணமாகவே தடையுத்தரவுகளை பெறுகின்றனர். எனக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தேன்.” –
என்றார்.