லெபனானை இலக்கு வைக்கும் இஸ்ரேல்!
லெபனானை இலக்கு வைக்கும் இஸ்ரேல்!
தெற்கு லெபனானின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளது. பீரங்கி தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் வடக்கு இஸ்ரேல் நோக்கி லெபனானிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு பதிலடி வழங்கும் வகையிலேயே லெபனான் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களாக இரு தரப்புக்குமிடையிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
அண்மைக்காலத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களினால் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 300 பேர் உட்பட லெபனான் குடிமக்கள் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்களில் 18 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.