பாரிய போதைப்பொருள் மீட்பு!
பாரிய போதைப்பொருள் மீட்பு!
இலங்கைக்கு தெற்காக 400 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் படகொன்றிலிருந்து பாரிய தொகை போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அப்படகில் 150 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட போதைப்பொருளும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.