4 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கும் காணொளியை வெளிப்படுத்தியவருக்கு சன்மானம்!
4 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கும் காணொளியை வெளிப்படுத்தியவருக்கு சன்மானம்!
வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமியின் துன்புறுத்தலை காணொளி மூலம் அம்பலப்படுத்திய இளைஞனுக்கு 500,000 ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் இதற்கான காசோலையை இன்று (12) வழங்கி வைத்தனர்.
வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமி ஒருவர் தாக்கப்படுவது போன்ற காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்
குகுல் சமிந்த என்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 4 வயது சிறுமி குகுல் சமிந்த என்பவரால் துன்புறுத்தப்படும் காணொளியை வெளிப்படுத்திய இளைஞனுக்கு இன்று சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞனின் துணிச்சலான செயலை காவல்துறை மா அதிபர் இதன்போது பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.