பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்!
![பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/IMG-20240605-WA0049-850x517.jpg)
பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்தமாக ஆறு பேர் நேற்று இரவு இலங்கை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டையில் வந்து இறங்கினர்.
இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.