அராலி தெற்கு அருள்மிகு கருப்பட்டிப் பிள்ளையார் கோயிலடியில் ஆர்ப்பாட்டம்.!
அராலி தெற்கு அருள்மிகு கருப்பட்டிப் பிள்ளையார் கோயிலடியில் ஆர்ப்பாட்டம்.!
பசுவதைத் தடைச் சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்
ஏழை மக்களின் பசு மாடுகளையும் கன்றுத்தாச்சி மாடுகளையும் களவெடுப்போரைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.
வைகாசி 17 ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம்.
அராலி தெற்கு வள்ளுவர் சன சமூக நிலையத் தலைவர் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
அராலிப் பெண்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்காவற்துறை இந்து சமயத் தலைவர் திரு அன்னராசா கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குழி அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில் தலைவர் திரு. செயமாறன் கலந்து கொண்டார்.
சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கலந்து கொண்டார்.
உருத்திர சேனையின் தொண்டர் பலர் கலந்து கொண்டனர்.
மிகச் சிறப்பாக நிகழ்த்திச் செய்தியைச் சொல்லிய ஆர்ப்பாட்டத்தினரின் உற்சாகத்தை ஊடகத்தார் பலர் வந்து பதிவு செய்தனர்.