*சந்நிதியான் ஆச்சிரமத்தின் மகத்தான பணிகள்!
*சந்நிதியான் ஆச்சிரமத்தின் மகத்தான பணிகள்!
*யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, யாழ்.போதனா மருத்துவமனையில் என்பு மச்சை மாற்று சிகிச்சையை ஆரம்பிக்கத் தேவையான மருந்துகளைக் கொள்வனவ செய்வதற்கான நிதி 525,000 ரூபா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.*
*மலசலகூட கட்டுமானப் பணிக்காக 2ம் கட்டமாக 75,000 ரூபா நிதி சுன்னாகத்தை சேர்ந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.*
*1ம் கட்ட நிதியாக 75,000 ரூபா முன்னர் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது*.
*இவ் உதவித்திட்டங்களினை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வழங்கி வைத்தார்.*
*சந்நிதியான் ஆச்சிரமம் இந்த மண்ணில் அன்னதானப்பணி மாத்திரமன்றி அறப்பணிகளையும் ஆற்றி வருகின்றமை சிறப்பிற்குரியது.*