*சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!
![*சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/124956017_gettyimages-648793904.jpg)
*சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*.
*குறித்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் நேற்றிரவு (01) 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.*
*குறித்த சம்பவத்தில், 11 வயதுடைய 5 வயதுடைய இரண்டு சிறுமிகளே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.*
*குறித்த இரண்டு சிறுமிகளும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுமிகளைக் காணவில்லை என தேடிய நிலையில் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களும் காணப்பட்டன. இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.*