டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
![டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/FB_IMG_1717295054895.jpg)
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 5,289 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 2,309 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,307 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்