ரஷ்யாவிற்கு அடுத்த மாதம் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு!
ரஷ்யாவிற்கு அடுத்த மாதம் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு!
ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
ஜூன் 5 – 7 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கை பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் பற்றிய தகவல்களைப் பெற பாதுகாப்பு அமைச்சு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும் அந்த இலக்கத்திற்கு இதுவரை 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 26 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.