ஈரான் ஜனாதிபதியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை மீட்கும் பணி தொடர்கிறது!
*ஈரான் ஜனாதிபதியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை மீட்கும் பணி தொடர்கிறது!
*ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசர க தரையிறக்கத்தை செய்ய வேண்டி ஏற்பட்ட ஈரான் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் இதுவரையில் தெளிவாக இல்லை
ஈரான் ஊடகங்களின்படி, கீஸ் கிளசி மற்றும் குடாபாரின் அணைகளைத் திறந்து வைத்து விட்டு ரைசி அஜர்பைஜான் எல்லையில் இருந்து திரும்பி ஈரானின் வடமேற்கில் உள்ள தப்ரிஸ் நகருக்குச் சென்று கொண்டு இரூக்கும் பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
ஈரானின் உள்துறை அமைச்சர் கூறுகையில், மீட்புப் படையினர் இன்னும் அந்த இடத்தை அடைய முயற்சி செய்கிறார்கள், ஆனால் மோசமான வானிலையால் அவர்களின் முயற்சிகள் தடைபடுகின்றன
ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறுகையில், மலை மற்றும் மரங்கள் நிறைந்த குறித்த பகுதியில் தெளிவு வெறும் சுமார் ஐந்து மீட்டர் வரை மட்டுமே ஆகும்
ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை அவசரகால மீட்புப் பணியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று தப்ரிஸ் நகரத்தின் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் அலிரெசாபேகி கூறுகிறார்.
ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் பயணித்த ஏனைய இரண்டு ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கியதாக அவர் கூறுகிறார்
மோசமான வானிலை – கடுமையான மூடுபனி மற்றும் மழை – ஈரானின் வடமேற்கில் உள்ள இடத்திற்குச் செல்வதற்கான மீட்புக் குழுக்களின் முயற்சிகளைத் தடுக்கிறது.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை.
ஈரானின் அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யும் படி ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.