பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!
பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!
வவுனியா பூவரசங்குளத்தில் நேற்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு பஸ் மோதியுள்ளது.
4 பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.