19 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
19 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 19 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையே கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.