யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் பரீட்சைகள் 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் பரீட்சைகள் 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.!
போதிய வரவின்மையால் 274 மாணவர்கள் வெளியில்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் 27 4 மாணவர்கள் ,பரீட்சை எழுத முடியாத நிலையில் நிற்கந்திக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி அலுவலகத்தினை வலுக்கட்டாயமாக இழுத்து மூடிய மாணவர்கள், தம்மை பரிசைக்கு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
எனினும் மாணவர்களுக்கு 80% வரவு கட்டாயம் பார்க்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட பொழுதும் மாணவர்களின் ஒழுங்கீனமான வரவு காரணமாக, 274 மாணவர்கள் பரீட்சை எழுத முடியாத நிலை தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் குழப்பமான நிலைமை தொடர்ந்து காணப்படுகின்றது.
கடந்த 04 தேதி நடக்க இருந்த ஆண்டு இறுதி பரீட்சை எதிர்வரும் 11ஆம் தேதிக்கு தற்காலிக பிற்படப்பட்டுள்ளது.