ஊரேழு றோயல் அணியின் உதைப்பந்தாட்ட வீரா் விபத்தில் சம்பவிடத்தில் பலி ; மானிப்பாய் பகுதியில் துயரம் .!
ஊரேழு றோயல் அணியின் உதைப்பந்தாட்ட வீரா் விபத்தில் சம்பவிடத்தில் பலி ;
மானிப்பாய் பகுதியில் துயரம் .!
நீர்வேலி பகுதியில் இன்று
காலை 5:30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பிரிவு மாணவனும் ஊரேழுறோயல் விளையாட்டுக்கழக வீரருமான சகீந்தன் உயிரிழந்துள்ளார்
தனது வீட்டில் இருந்து நீர் வேலி சந்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து இடம் பெற்றுள்ளது
யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம்
வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும்மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் வயது 22 என்ற மாணவனே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார் உடலம் உடல்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது