யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் – எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி சமூகம் ஆட்சேபனை அடையாள போராட்டம் !
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் – எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி சமூகம் ஆட்சேபனை அடையாள போராட்டம் !
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதற்கு எமது கல்லூரியின் பழைய மாணவரும்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில்,நீரியல் வளத்துறை அமைச்சரும்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அமைச்சர் #டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளர் குறித்த பாடசாலை சமூகத்தினர்.