இன்று யாழ் மானிப்பாய் வீதியில் பெரிய முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தெரிவால் பதற்றம்.!
இன்று யாழ் மானிப்பாய் வீதியில் பெரிய முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தெரிவால் பதற்றம்.!
சென்ற 22.01.2024 அன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முகைதீன் ஜும்மாபள்ளிவாசலலில் முஸ்லீம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர் நிஸ்தாக் தலைமையில் புதிய நிர்வாக தெரிவு மஹல்ல வாசிகள் முன்னிலையில் இரவு 8.30 மணியளவில் ஆரம்பமானது. அப்பொழுது சிறு குழப்பமான சூழ்நிலை காணப்பட்டதால் அந்தப் பள்ளி மஹல்லா வாசிகள் வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒரு சிலரை வைத்து யாழ்முஸ்லீம்களளின் பூர்வீகம் தெரியாத ஒரு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராகத் தெரிவு செய்துள்ளார்கள்.
இத் தெரிவு சம்பந்தமாக பல பேருடைய கையொப்பம் இட்ட ஒரு மகஜரை முஸ்லீம் சமய திணைக்களம் பணியாளருக்கும் chaiman தலைவருக்கும் அனுப்பியும் இன்று வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எதிர் வரும் மாதத்தில் புனித நோன்பு ஆரம்பமாக உள்ளதால் தயவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ் முஸ்லீம் மக்கள் தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.
1. யாழ்ப்பாணத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசகளில் யாழ் பூர்வீகம் தெரிந்த ஒருவரை தலைவராகத் தெரிவு செய்ய வேண்டும்.
2. காரணம் கடந்த கால யுத்தத்ததால் பல துன்பங்களை அனுபவித்து, இரத்தம் சிந்தி, உயர் தியாகங்கள் புரிந்து இழந்த சொத்துக்களைப் பெற வேண்டி உள்ளதால் பள்ளிவாசல்களில் யாழ் மண்ணைச் சேர்ந்தவர்கள் நிர்வாகத்தில் வர வேண்டும்.
3. யாழில் மீள் குடியேற்றம், நஷ்ட ஈடுகள் இன்றும் சீரில்லாமல் காணப்படுகிறது.
4. இந்த விடயங்களை யாழில் உள்ள நிஸ்தாக் உத்தியோத்தரிடம் தெளிவாகக் கூறியும் இதனை ஏற்க மறுத்து விட்டார்.
5 .இவ்வாறான ஒரு தெரிவை நிஸ்தாக்குடைய ஊர் பள்ளிவாசலலில் நடந்தால் அவர் பார்த்துக்கொண்டு இருப்பாரா.
6 . எனவே நடந்த இந்த தெரிவை யாழில் உள்ள முஸ்லீம்களும், யாழைப் பிறப்பிடமாக கொண்ட வெளிநாட்டில் வாழுகின்ற யாழ் மண்ணைச் சேர்ந்தவர்களின் திருப்தியற்ற நிலையில் என்னிடம் பலகேள்விகளைக் கேட்கிறார்கள்.
7 . எனவே இந்தப் பள்ளிவாசலலின் நிர்வாகத் தெரிவை முஸ்லீம் சமய திணைக்கள அதிகாரிகள் எதிர்வரும் புனித நோன்பு ஆரம்பமாக உள்ளதால் உடனடியாக நேரில் வந்து தங்கள் முன்னிலையில் தெரிவை நடத்துமாறு யாழ் மகல்லா வாசிகளும்,யாழ் அனைத்து பள்ளி வாசல்நிர்வாகிகளும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
8 . யாழில் இருந்து வெளியேற்றப்படட்ட நாங்கள் புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் அகதிகளாக பல வருடங்கள் வாழ்ந்தோம். அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களளில்
யாழை சேர்ந்த ஒருவரை யாவது பள்ளி வாசல் தலைவராக தெரிவு செய்வார்களா? பள்ளியில் ஒரு இரவு தங்குவதற்கே அனுமதியில்லை.