கிணற்றில் தண்ணீர் அள்ள முற்பட்ட மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு!
![கிணற்றில் தண்ணீர் அள்ள முற்பட்ட மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/01/IMG_20240105_121552.jpg)
கிணற்றில் தண்ணீர் அள்ள முற்பட்ட மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு!
யாழில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டி கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உள்ள கிணற்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட வேளை கிணற்றில் தவறி விழுந்தார் என மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.