வெற்றிகரமான முடிவை எட்டிய பேச்சுவார்த்தை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர்!
வெற்றிகரமான முடிவை எட்டிய பேச்சுவார்த்தை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர்!
தாய்லா ந்தின் பிரதம மந்திரி Srettha Thavisin இலங்கையுடனான சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான முடிவின் பின்னர் பெப்ரவரி 2024 இல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA) கையெழுத்திடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என Bangkok Post செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 18-20 வரை 9வது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை இலங்கை நடத்தியதாக தாய்லாந்தின் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் Chotima Iemsawasdikul ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தாய்லாந்தின் வணிக மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரலும், FTA பேச்சுவார்த்தைக் குழுவின் ஆலோசகருமான Auramon Supthaweethum இதில் கலந்து கொண்டார்.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தொடர்ச்சியான மறுசீரமைப்பு ஆகியவற்றின் விளைவாக 4 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.
வர்த்தகம், சேவைகள், முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான விதிகள் குறித்து சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக Iemsawasdikul தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், பெப்ரவரியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் Srettha Thavisin இலங்கைக்கு செல்வதற்கு முன்னர், வர்த்தக அமைச்சு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தாய்லாந்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் என்று Iemsawasdikul ஐ மேற்கோள் காட்டி, Bangkok Post தெரிவித்துள்ளது.