அடுத்த தேர்தல் குறித்து மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை..!
![அடுத்த தேர்தல் குறித்து மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை..!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/12/FB_IMG_1703833520877.jpg)
அடுத்த தேர்தல் குறித்து மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை..!
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெறுவது எனது நம்பிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சியைப் பிடிப்பதே எதிர்பார்ப்பு எனவும் எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையைப் பெறுவதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்” கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இரண்டாம் நாள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் பின்வருமாறு.
கேள்வி:- அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு. கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பீர்களா?
பதில்: அப்படி எதுவும் இல்லை. அமைப்பாளர்களின் தவறில்லை.
கேள்வி:-கட்சியை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?
பதில்:- கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த விஷயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.
கேள்வி:- இந்த நாட்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பதில்- இந்த அரசாங்கம் செய்த சிறந்த பணியாக நான் கருதுகிறேன். போதைப்பொருளால் இந்த நாடு அழிந்து வருகிறது.
கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க நீங்கள் தயாராகி வருவதாகப் பேசப்படுகிறது. அது உண்மையா
பதில்: இதுவரை அப்படி ஒரு கதை இல்லை. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிக்கு செல்லும் எண்ணமில்லை.
கேள்வி: எதிர்காலத்தில் வரி குறைக்கப்படுமா? அதிகரிக்கப்படுமா?
பதில்:- வரிகளை நீக்க முடியாது.வரிகள் இருக்கும். நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.