செஞ்சொற்செல்வரின் விசேட செய்தி…
![செஞ்சொற்செல்வரின் விசேட செய்தி…](https://likedtamil.lk/wp-content/uploads/2023/12/FB_IMG_1702467504795-720x560.jpg)
செஞ்சொற்செல்வரின் விசேட செய்தி…
அன்னை சிவத்தமிழ் செல்வியின் 99 பிறந்தநாள் அறக்கொடை விழா எதிர்வரும் 07.01.2024ம் திகதி காலை,
9.00 மணிக்கு தெல்லிப்ழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி பாலகோபி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிவத்தமிழ் செல்வியின் 99 பிறந்த நாள் அறக்கொடை விழாவில் ஐந்து பெருந்தகைகள் சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
பேராசிரியர் சிவலிங்கராசா, வைத்திய கலாநிதி அருளானந்தம், இளைப்பாறிய விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம், நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரன், இளைப்பாறிய அதிபர் மு.அருனாசலம் ஆகிய பெருந்தகைகள்,
விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
99 பிறந்தநாள் அறக்கொடை விழா அறக்கொடை நிதி உதவியாக தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலைக்கு ரூபா 200,000.00 வழங்கப்படவுள்ளதுடன்,
உடுவில் கல்வி கேட்ட பிரிவில் உள்ள மிகவும் பொருத்தமான 50 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.
தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் வரும் 25.03.2024ம் திகதி நடைபெற அன்னையின் திருவருள் கூடியுள்ளது.
எங்கள் அம்பாளின் திருவருளினால் எமது தேவஸ்தானத்தில் தற்பொழுது திருப்பணி வேலைகள் மிகவும் சிறப்புற நடைபெற்று வருகின்றது.
இந்தப் பணிகளை உரிய காலத்தில் முழுமையாக முடிவுறுத்தி எங்கள் அம்பாளின் மஹா கும்பாபிஷேகத்தினை மிகவும் சிறப்புற நடாத்துவதற்குரிய முழுமையான பணிகளை எமது தேவஸ்தானம் மேற்கொண்டு வருகின்றது.
எமது இந்தப் பணிகளுக்கு உலகெங்கும் பரந்து வாழும் அன்னையின் பக்தர்களிடம் இருந்து உதவிகளை எமது தேவஸ்தானம் வேண்டி நிற்கின்றது.
எனவே எமது வேதவஸ்தானத்தின் காரியாலயத்தில் நேரடியாகவோ அல்லது எமது வங்கி இலக்கங்கள் ஊடாகவோ தங்களது உதவிகளை எமது அன்னையின் திருப் பணிகளுக்கு பக்தர்கள் தங்களது உதவிகளை வழங்க முடியும்.
உலகப் புகழ்பெற்ற எங்கள் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகப் பணிகள் யாவும் சிறப்புடன் நிறைவு பெற பக்தர்களின் தாராள உதவிகளை நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.
இந்தப் பணிகளுக்கு தங்களின் உதவிகளை வழங்கும் பக்தர்கள் எமது அலுவலகத்தில் அதற்குரிய பற்றுச் சீட்டினை பெற்றுக் கொள்ள முடியும். வங்கிகளில் வைப்பிடும் பக்தர்கள்,
thurkaiammantemple@gmail.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.
வங்கி இலக்கங்கள்
இலங்கை வங்கி சுன்னாகம் கிளை, கணக்கு இல:-07470940 அல்லது 77683985, கொமர்ஷல் வங்கி சுன்னாம் கிளை, கணக்கு இல:-C1107000214
மேலும் விபரங்களுக்கு https://www.tellidurga.org/donate-us/ என்ற எமது இணையத்தள முகவரியினை பார்வையிடுங்கள்
நன்றி
தலைவர்,
துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.