கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்தவருக்கு அபராதம் அரிசியும் பறிமுதல்!
கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்தவருக்கு அபராதம் அரிசியும் பறிமுதல்!
3,54,000 பெறுமதியான 1,365 கிலோ கிராம் கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்பொருள் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு அத்தனகல்ல நீதிவான் மஞ்சுள கருணாரத்ன ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்ததுடன் அரிசியைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
நிட்டம்புவ நகரிலுள்ள பல்பொருள் அங்காடி நிலைய உரிமையாளர் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்தாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.