யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை மட்டக்களப்பில் போராட்டம்!
![யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை மட்டக்களப்பில் போராட்டம்!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/11/IMG_20231104_215857-718x560.jpg)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை மட்டக்களப்பில் போராட்டம்!
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளையும் கண்டித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (05) மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெறவுள்ளது.
மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.