பருத்தித்துறை – கட்டைக்காடு இடையிலான CTB பேருந்து இணைப்பு அச்சுக் கழன்று வீதியில் வீழ்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அவதி!
![பருத்தித்துறை – கட்டைக்காடு இடையிலான CTB பேருந்து இணைப்பு அச்சுக் கழன்று வீதியில் வீழ்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அவதி!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/11/IMG-20231104-WA0011-850x560.jpg)
பருத்தித்துறை – கட்டைக்காடு இடையிலான CTB பேருந்து இணைப்பு அச்சுக் கழன்று வீதியில் வீழ்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அவதி!
இன்று (4) பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு நோக்கிப் பயணித்த அரச பேருந்தே இவ்வாறு கோளாறு காரணமாக இடைநடுவில் நின்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு மணற்காடு, நாகர்கோவில், மருதங்கேணி, தாளையடி, கட்டைக்காடு, கோவில் வரையான சுமார் 55km வரையான பகுதிக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ள பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
பருத்தித்துறை சாலையில் இருந்து வடமராட்சி கிழக்கு நோக்கிப் புறப்படும் பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்து நடு வீதியில் நின்றுவிடுவது வழமையான செயற்பாடாக உள்ளது.
இதனால் இவ் வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் தொடர் அசோகரியங்களை்எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான நிலையினை பருத்தித்துறை சாலையில் பல தடவைகள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.