காசாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது!
![காசாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/11/FB_IMG_1698940682134.jpg)
காசாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது!
காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையேயான போர் இன்றுடன் 27 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.»
இந்நிலையில் காசாவில் இருந்து வெளிநாட்டவரை வெளியேற்ற இஸ்ரேல் அனுமதித்து நேற்று முதற்கட்டமாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ள 320 பேர் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் பலஸ்தீனியர்கள் உட்பட காயமடைந்த 76 பேர் எகிப்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.»
இதைத் தொடர்ந்து இன்று மேலும் 500 பேர் வரையில் எகிப்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.»
இதையடுத்து காசாவில் உள்ள வெளிநாட்டினர் 7,000 பேரை வெளியேற்ற உதவுதாக எகிப்து தெரிவித்துள்ளது.»
இந்த போரில் இதுவரை 8,800 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,400 என்பது குறிப்பிடத்தக்கது.