கொழும்பில் நாளை மறுதினம் (01) பாரிய ஆர்ப்பாட்டம்!
கொழும்பில் நாளை மறுதினம் (01) பாரிய ஆர்ப்பாட்டம்!
கொழும்பில் நாளை மறுதினம் (01) அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (30) மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால், மின்சார சபைத் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நேற்றிரவு (29) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.