பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் கற்பிக்க வேண்டிய மிகக்குறைந்த பாடவேளைகள்!
பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் கற்பிக்க வேண்டிய மிகக்குறைந்த பாடவேளைகள்!
2021/06 ஆம் இல. சுற்றறிக்கையின் படி பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் கற்பிக்க வேண்டிய மிகக்குறைந்த பாடவேளைகள்!
1)பாடசாலை அதிபர் (School In charge Principal)
,*கற்பித்தல் பணியில் இருந்து
முற்றாக விடுவிக்கப்பட்டு,
பாடசாலை நிர்வாக பணியில்
ஈடுபடுதல் வேண்டும்.
2) பிரதி அதிபர்கள் (Deputy Principals)
*ஒரு வாரத்தில் குறைந்தது 10
பாட வேளைகள் கற்பித்தலிலும்
30 பாட வேளைகள் நிர்வாக
பணியிலும் ஈடுபட வேண்டும்.
நேரசூசியில் ஓய்வுப் பாட வேளை
வழங்கக் கூடாது.
*2,000-3,000 இடைப்பட்ட மாணவ
தொகை கொண்ட பாடசாலை
களில் நிர்வாகத்திற்கு பொறுப்
பான பிரதி அதிபர் கற்பித்தல்
பணியில் இருந்து முற்றிலும்
விடுவிக்கப்படுவார்.
3,000 க்கு மேற்பட்ட மாணவ
தொகை கொண்ட பாடசாலையில்
இரு பிரதி அதிபர்கள் கற்பித்தல்
பணியிலிருந்து முற்றிலும்
விடுவிக்கப்படுவார்கள்.
3)உதவி அதிபர்கள் Asst.Principals
*ஒரு வாரத்தில் குறைந்தது 12
பாட வேளைகள் கற்பித்தலிலும்,
28 பாடவேளைகள் நிர்வாகப்
பணியிலும் ஈடுபட வேண்டும்.நேர
சூசியில் ஓய்வுப் பாட வேளை
இருக்கக் கூடாது.
4)பகுதித் தலைவர்கள்/ Sectional
Heads/மேற்பார்வையாளர்கள்
Supervisors
*ஒரு வாரத்தில் குறைந்தது 16
பாட் வேளைகள் கற்பித்தலிலும்,
24 பாடவேளைகள் வகுப்பறை
மேற்பார்வை மற்றும் ஏனைய
நிர்வாக பணியிலும் ஈடுபட
வேண்டும்.நேரசூசியில் ஓய்வுப்
பாட வேளை இருக்கக் கூடாது.
5)SDEC பொருளாளர்
ஒரு வாரத்தில் குறைந்தது 10
பாட வேளைகள் கற்பித்தலில்
இருந்து விடுவிக்க வேண்டும்.
ஆகவே (30-10 பாட வேளைகள்)
20 பாட வேளைகள் கற்பித்தலில்
ஈடுபட வேண்டும்..
6)பொறுப்பாசிரியர்கள் (Teacher In charge)
விளையாட்டு, அழகியல் ,இணை
பாட விதான,மாணவர் ஒழுக்கம்
போன்ற வற்றுக்கு பொறுப்பான
ஆசிரியர்கள் ஒரு வாரத்தில்
குறைந்தது 30 பாட வேளைகள்
கற்பித்தலில் ஈடுபட வேண்டும்.
7)மாணவர் ஆலோசனை ஆசிரியர் (Teacher for Student Counseling)
300 க்கு குறைந்த மாணவர்கள்
கொண்ட பாடசாலையில் 15 பாட
வேளை கற்பித்தலில் ஈடுபட
வேண்டும்.300 க்கு மேற்பட்ட
மாணவர் தொகை கொண்ட
பாடசாலையில் முற்றிலும்
கற்பித்தலில் இருந்து விடுவிக்க
படுவர்.
பாட ஆசிரியர்கள் (Subject Teachers)
*ஒரு வாரத்தில் குறைந்தது 30
பாட வேளைகள் கற்பித்தலில்
ஈடுபட வேண்டும்.
மிகுதி 10 பாட வேளைகள் பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
-SBPTD செயற்பாடுகளை திட்டமிடல்
-பாடசாலை மட்ட ஒப்படைகள்,
மதிப்பீடுகளைத் திட்டமிடல்.
-பாடக்குறிப்புக்களைத் திட்டமிடல்.
-மாணவர் பயிற்சி கொப்பி
மதிப்பீடு.
-பரிகாரக் கற்பித்தலை மேற்கொள்
ளுதல்.
-பதில் பாடவேளை கற்பித்தல்.
-ஆய்வு கூட சோதனை திட்டமிடல்
-கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுதல்.
-அதிபரால் வழங்கப்பட்ட வேறு
பணிகள்
சமய பாட ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் குறைந்தது 20 மணித்தியாலங்கள் சமயம் சார்ந்த பாடங்களை கற்பிக்க வேண்டும்.
வருடாந்த நேரசூசி தயாரிக்கும் போது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்.
2021/6 ஆம் இல.சுற்றறிக்கையின் படி சகல ஆளணியினருக்கும் அங்கீகரிக்கப்பட்ட நேரசூசி வழங்கக் வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நேரசூசி இல்லாத ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நேரசூசி வழங்க முடியாத மேலதிக ஆசிரியர்கள் தொடர்பாக வலயக் கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு மாகாணப் பாடசாலை அதிபர்கள் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். தேசிய பாடசாலை அதிபர்கள் எனில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஊடாக தேசிய பாடசாலைப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை மேற்படி நடைமுறை ஊடாக அறிவிக்காத அதிபர்களுக்கு எதிராக தேசிய கணக்காய்வு/ உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும்.அதாவது கணக்காய்வு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
அங்கீகரிக்கப்பட்ட நேரசூசி இல்லாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செயலாற்றுகை தரங்கணிப்பை சிபாரிசு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என கணக்காய்வு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Sri Lanka government general services union