பொலிஸாருக்கு பொலிஸ்மா அதிபரிடமிருந்து எச்சரிக்கை!
பொலிஸாருக்கு பொலிஸ்மா அதிபரிடமிருந்து எச்சரிக்கை!
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புள்ளவர்களை தடுத்து நிறுத்துமாறு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
இவ்வாறு செயற்படாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக சிரேஷ்ட டிஐஜிக்கள் மற்றும் டிஐஜிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் பொலிஸ் மா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.