இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்..!!
இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்..!!
இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தொடர் வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார தெரிவித்தார்.
இதற்காக அனைத்து அரச அதிகாரிகள், மக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இவ்வாறு தெரிவித்தார்.