விளம்பர பலகைகள், கட்-அவுட்கள் மற்றும் சுவரொட்டிகள்: ஜனாதிபதியின்புதிய உத்தரவு!
விளம்பர பலகைகள், கட்-அவுட்கள் மற்றும் சுவரொட்டிகள்: ஜனாதிபதியின்புதிய உத்தரவு!
விளம்பரப் பலகைகள், கட்-அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் தனது படங்களை பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சக அரசியல் தலைவர்கள் தங்களது புகைப்படங்களை பிரச்சாரப் பொருட்களில் அச்சிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுலோக அரசியலை விட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி விக்கிரமசிங்க, இவ்வாறான நடைமுறைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
கோஷங்கள் மற்றும் கட்-அவுட் அடிப்படையிலான அரசியலுக்கு தனது நீண்டகால எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
நேற்று (08) காலை மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதையடுத்து, மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெரிய கட்-அவுட்டை அகற்றுமாறு உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.