சாவகச்சேரியில் மோட்டார் குண்டு, துப்பாக்கி மீட்பு!
![சாவகச்சேரியில் மோட்டார் குண்டு, துப்பாக்கி மீட்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/10/IMG-20231009-WA0007-850x560.jpg)
சாவகச்சேரியில் மோட்டார் குண்டு, துப்பாக்கி மீட்பு!
தென்மராட்சி – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (08) ஞாயிற்றுக் கிழமை காலை மாடு மேய்ப்பதற்காக தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயல் பகுதியில் பற்றையோரமாக குறித்த ஆயுதங்கள் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதி கிராம சேவகர் ஊடாக பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.