காங்கேசன்துறை – நாகப்பட்டிணம் கப்பல் சேவைக்கு இன்று சோதனை ஓட்டம்!
![காங்கேசன்துறை – நாகப்பட்டிணம் கப்பல் சேவைக்கு இன்று சோதனை ஓட்டம்!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/10/23-651f96385ec4e.png)
காங்கேசன்துறை – நாகப்பட்டிணம் கப்பல் சேவைக்கு இன்று சோதனை ஓட்டம்!
இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டிணம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் இன்று(08) இடம்பெறவுள்ளது.
காலநிலையைக் பொறுத்து குறித்த திகதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வருடம் ஐனவரி முதல் முழுமையான கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கப்பலில்150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.