வடக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் சமிந்த வாஸ்!
வடக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் சமிந்த வாஸ்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளரான சமிந்த வாஸ் தலைமையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதற்கமைய நேற்று(06) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று (07) யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், நாளை (08) வவுனியாவில் பயிற்சி முகாம் இடம்பெறவுள்ளது.
இப் பயிற்சியில் பல்வேறு வயதுப் பிரிவினைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்குபற்றி வருகின்றனர். அவர்களுக்கான ஆலோசனைகளை சமிந்த வாஸ் வழங்கி வருகின்றார்.
இந்த பயிற்சி முகாமில் இருந்து 150 வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களை மேலும் வலுப்படுத்தும் பயிற்சிகளை JAFFNA STALLIONS CRICKET ACADEMY முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.