வைத்தியரின் 4 இலச்சம் ரூபா பெறுமதியான ஆப்பிளை ஆட்டைய போட்ட நோயாளி!
வைத்தியரின் 4 இலச்சம் ரூபா பெறுமதியான ஆப்பிளை ஆட்டைய போட்ட நோயாளி!
கொழும்பு – புளூமண்டல் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுகவீனமுற்ற நபர் ஒருவர் வைத்தியரின் 400,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக புளூமண்டல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 68 வயதான மருத்துவர் புளூமெண்டல் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்தக் கைத்தொலைபேசியை திருடியவரின் அடையாளம் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த நபரைக் கைது செய்ய புளூமெண்டல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.