யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பத்தாயிரம் மரக்கன்றுகளின் திட்டத்தின் கீழ் இதுவரை 3533 மரக்கன்றுகள்!
யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பத்தாயிரம் மரக்கன்றுகளின் திட்டத்தின் கீழ் இதுவரை 3533 மரக்கன்றுகள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மறைந்த இந்த மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு எதை போதித்தார்களோ அந்த போதனைகளை ஏற்று நடக்க வேண்டியது மூஃமின்கள் உடைய கடமையாகும் நபியவர்களை உண்மையாக நேசிக்க கூடிய முஸ்லிம்கள் நபி அவர்கள் காட்டித் தந்த வழியிலேயே பயணிக்க முடியும் அந்த வகையில் இன்று (2023.09.29)
யாழ் முஸ்லிம் ஒன்றியத்தினால் குருநூர் நகர் மக்களுக்காக 33 தென்னை மரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான அனுசரணை வழங்கிய சகோதரர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நூர் நகர் பள்ளி மக்களுக்கான தென்னங்கன்றுகள் தொடர்ந்து வழங்கப்பட இருக்கின்றது.
நபியவர்கள் எமக்கு காட்டி தராத எந்த ஒரு விடயமும் நன்மை அளிக்காது என்பதனை நாம் ஒவ்வொருவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த மாதத்தில் வீண் செலவுகள் ஆடம்பரங்கள் போன்றவற்றை தவிர்த்து ஏழை எளியவர்களுக்கு உதவுவோம் இதுவே நபி வழியாகும் யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் பத்தாயிரம் மரக்கன்றுகளின் திட்டத்தின் கீழ் இதுவரை 3533 மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருக்கிறது.