இலங்கையில் தொலைபேசியால் நேர்ந்த விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த நபர்!!
இலங்கையில் தொலைபேசியால் நேர்ந்த விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த நபர்!!
நுரைச்சோலை தல்வ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தல்வா பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கைத்தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.