மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்கங்களுக்கு அறிவிப்பு!!
மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்கங்களுக்கு அறிவிப்பு!!
மின்சாரத்துறையுடன் தொடர்புடைய 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார அமைச்சு அனைத்து மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அறிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து இது தொடர்பான நடைமுறை தொடர்பில் விளக்கமளித்ததாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மின்சாரத்துறையுடன் தொடர்புடைய 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதோடு மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கான முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், சீர்திருத்தக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளில் அந்தப் பிரேரணைகள் தொடர்பில் கவனம் செலுத்தத் தயார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.