யாழ்.தென்மராட்சி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மாணவி ஒருவர் புற்று நோய் காரணமாக நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்.தென்மராட்சி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மாணவி ஒருவர் புற்று நோய் காரணமாக நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
தரம் 2 ல் கல்வி கற்கும் கொடிகாமம் மத்தி பகுதியைச் சேர்ந்த றதீஸ் சுபிட்ஷா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தரம் ஒன்றில் கல்வி கற்கும் காலப்பகுதியில் குறித்த மாணவி தடுக்குண்டு விழுந்ததில் காலில் கண்டல் காயம் ஒன்று ஏற்பட்டதாகவும் பின்னர் அது புற்று நோய்க்கு வழி வகுத்த நிலையில் சுமார் ஒரு வருட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
மாணவி புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளமையானது தென்மராட்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.