அன்னை பூபபதி அம்மாவின் 35ம் ஆண்டு (19/03/2023) உண்ணாநோன்பு ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் .இன்று செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இன்று அன்னை பூபதி அம்மாவின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் பொதுச்செயலாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர் அன்னைக்கு மலர் மாலை அணிவித்தார். ஈகைச்சுடரினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்டச்செயலாளர்
பொன் மாஸ்டர் அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது . அதன் பின்னர் அன்னைக்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.