பெரும் தொகை நகைகள் தொடர் திருட்டு!
![பெரும் தொகை நகைகள் தொடர் திருட்டு!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/03/4E7AA7C7-809B-4B4D-BA32-DEC578D7639F.jpeg)
இரவு நேரம் வீட்டில் ஆட்கள் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 18 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை(08) இரவு 9:30 மணியளவில் அல்வாய் வடக்கு, வைரவர் கோயிலடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் பின் கதவை உடைத்து சென்ற திருடர்கள் அங்கிருந்த தாலிக்கொடி, மோதிரம் சங்கிலி, காப்பு உட்பட 18 பவுண் தங்க நகைகளையும் பெறுமதியான தொலைபேசி ஒன்றினையும் திருடிச் சென்றுள்ளனர்.
- இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பெலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.