வவுனியாவில் சுழற்சி முறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி கைது.
![வவுனியாவில் சுழற்சி முறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி கைது.](https://likedtamil.lk/wp-content/uploads/2023/02/3c72decbf4b35661d70e2ce0b1dc049cd953796907286d8e0720af7d33898d26.0.jpg)
சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக, வவுனியாவில் சுழற்சி முறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி கைது!
வவுனியாவில் சுழற்சி முறையிலலான உணவு தவிர்ப்பபு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வருகைதந்த இலங்கை மின்சாரத் திணைக்களத்தினரே இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை, போராட்டம் நடாத்திவரும் கொட்டகையில் பயன்படுத்தி வந்துள்ளமைக்காக கைது செய்துள்ளனர்.
இறுதிப் போரின் போது வலிந்து காணாமல்ப் போன தமது உறவினர்களைத் தேடு கடந்த இரு வருடங்களாக வவுனியா நகர்ப் பகுதியில் கொட்டகை அமைத்து, சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.